இது எப்படி நடந்தது என்று எனக்கு தெரியல. பிரமிப்புடன் பேசிய ஜடேஜா – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சின் போது 9 விக்கெட்டுக்கு ஜேமிசனுடன், நீல் வாக்னர் ஜோடி சேர்ந்து விளையாடினார்.

Jadeja

- Advertisement -

அப்போது 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி வீசிய பந்தை தூக்கி அடிக்க அந்த பந்து மேலே பறந்தது இதனை சரியாக கணித்த ஜடேஜா கவர் திசையிலிருந்து எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அற்புதமான ஒரு கேட்ச்சை ஒற்றைக் கையால் பிடித்து அசத்தினார். அவர் அந்தக் கேட்ச்யை பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மேலும் ரீப்ளேவில் அந்த கேட்ச் மிகவும் அற்புதமான ஒன்று என்று தெரியவந்தது. அந்த விக்கெட்டை நம்பமுடியாமல் நீர் வாக்னர் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு வெளியேறினார். மேலும் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இது குறித்து பேசிய ஜடேஜா கூறியதாவது : வாக்னர் ஸ்கொயர் லெக் திசையில் பந்தை அடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன்.

Jadeja 3

ஆனால் நான் நின்ற இடத்திற்கும் மேல் பந்து வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் காற்று பலமாக வீசியதால் பந்து வந்த வேகம் மிக அதிகமாக இருந்தது. நான் கையை நீட்டும் போது அது மாட்டிக்கொண்டது. கேட்ச் பிடித்த போதிலும் அதை எப்படி பிடித்தேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை ஒரு பிரமிப்போடு பேசினார் ஜடேஜா

Advertisement