உனக்கு இந்த அளவுக்கு கூடவா கிரிக்கெட் தெரியாம போச்சு. தனது மனைவியை கிண்டல் செய்த இஷாந்த் சர்மா

Pratima-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் இஷாந்த் ஷர்மா. தற்போது உள்ள இந்திய அணியில் மிகவும் சீனியர் வீரர் இவர் தான். டெஸ்ட் அணியில் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் இவர் விரைவில் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 இந்திய பந்து வீச்சாளர்களின் கைகளை பதிவிட்டு இந்த பந்துவீச்சாளர்கள் யார் என்று கண்டுபிடிக்குமாறு ஒரு பதிவை பதிவிட்டது. இந்த புகைப்படத்தை பார்த்த இஷாந்த் சர்மாவின் மனைவி பிரத்திமா சிங், அஸ்வினுடைய கையைப் பார்த்து அதுவும் பும்ராவின் பந்துவீச்சு என்று பதிலளித்திருந்தார்.

- Advertisement -

உண்மையில் அந்த புகைப்படத்தில் ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகிய நால்வரின் பந்துவீச்சு கொண்ட கைகள் இருந்தது . இப்படி தவறாக கூறியதால் இதனைப் பார்த்த இசாந்த் சர்மா, ‘பிரதிமா பும்ரா ஒரு வேகப்பந்து வீச்சாளர். அந்த அளவுக்காவது உனக்கு கிரிக்கெட் தெரியும் என்று நினைத்து இருந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இசாந்த் சர்மாவின் மனைவி பிரத்திமா சிங் இந்திய பேஸ்கேட் பால் அணியில் ஒரு வீராங்கனை ஆவார். இந்த இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இஷாந்த் சர்மாவின் இந்த கிண்டலான பதிவு தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் சமூகவலைத்தளம் மூலம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement