கோலியின் கேப்டன்சியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச இதுவே காரணம் – இஷாந்த் பேட்டி

Ishanth-1
- Advertisement -

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. அதிலும் இதுவரை எந்த காலத்திலும் இந்திய அணியில் இல்லாத ஒரு வேகப்பந்து வீச்சு யூனிட்டாக தற்போது உள்ள டெஸ்ட் இந்திய அணி மாறியுள்ளது. இந்திய அணியின் இந்த வேகப்பந்து வீச்சு வளர்ச்சி குறித்து இந்திய அணியின் மூத்த வீரரான இசாந்த் சர்மா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Ishanth-2

- Advertisement -

இஷாந்த் சர்மா 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டிராவிட் தலைமையில் அறிமுகமாகி அதன் பின்னர் கும்ப்ளே, டோனி மற்றும் கோலி என நான்கு கேப்டன்களுக்கு கீழ் கிரிக்கெட் விளையாடி உள்ளார். இந்நிலையில் தோனி மற்றும் கோலி கேப்டன்சி குறித்து இஷாந்த் பேசுகையில் குறிப்பிட்டதாவது : தோனியின் கேப்டன்சியில் செய்த ஒரு தவறை நாங்கள் கோலியின் கேப்டன்சியில் செய்யவில்லை.

தோனியின் தலைமையில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் திறமையுடன் இந்திய அணியில் இருந்தாலும் அதிகப்படியான வேகப்பந்து வீச்சாளர்களை தோனியின் தலைமையில் பரிசோதித்தார்கள். அந்தகாலத்தில் சுழற்சி முறையில் முறையில் வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டதால் எங்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் கோலியின் தலைமையில் நிலையான வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அதிக தொடரை எதிர்கொண்டனர்.

Ishanth-2

எனவே முன்பு எங்கள் இருந்த எங்களிடமிருந்த அனுபவமும், எங்களது திறமையும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி உதவியது .விராட் கோலி கேப்டன் பதவியை ஏற்ற போது நாங்கள் ஓரளவு அனுபவம் பெற்று இருந்தோம். அது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் அதிக வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் ஒரு குழுவாக மூன்று முதல் நான்கு வேகப்பந்து வீச்சாளர் இருக்கும்போது எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்ததால் சிறப்பாக பந்து வீசிய முடிகிறது என்றும் இசாந்த் சர்மா கோலியில் கேப்டன்சி குறித்து இஷாந்த் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement