காயமடைந்த ஷர்துல் தாகூருக்கு பதிலாக விளையாடப்போவது இவர்தானாம் – வெளியான தகவல்

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

Thakur

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என கேப்டன் கோலி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் யார் விளையாடுவார் ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாகூர் தற்போது இரண்டாவது போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்திய அணியில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளதால் இன்றைய போட்டியில் யார் விளையாடுவார் ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Thakur 1

ஏற்கனவே முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடாத அஸ்வின் இன்றைய போட்டியில் விளையாடுவாரா ? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்திய அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஜோடியுடனே களம் இறங்கும் என்று கோலி கூறியுள்ளதால் இன்றைய போட்டியில் நிச்சயம் தாகூருக்கு பதிலாக இசாந்த் சர்மா களம் இறங்குவார் என்று தெரிகிறது.

ishanth 1

ஏற்கனவே கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை தவிரவிட்ட இஷாந்த் தற்போது நல்ல திறனுடன் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் நிச்சயம் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது. மற்றபடி பும்ரா, ஷமி, சிராஜ், ஜடேஜா ஆகியோரும் இந்த போட்டியில் தொடர்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement