பொதுவாக இந்த பழக்கம் எங்கிட்ட இல்லை. ஆனால் கோலி போட்ட ஆர்டர்னாலதான் இத பண்ணேன் – இஷான் கிஷன்

Ishan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1-1 என்ற கணக்கில் சம நிலையை அடைந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமாக துவக்க வீரராக அறிமுகமான இஷன் கிஷன் திகழ்ந்தார். 32 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என 56 ரன்களை அடித்து அசத்தினார்.

ishan 2

- Advertisement -

அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டி முடிந்து அவரின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேட்டியளித்த இஷான் கிஷன் கூறுகையில் : முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடுவது என்பது எப்போதும் எளிதானதல்ல. மும்பை இந்தியன்ஸ் அணி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள ஏராளமான மூத்த வீரர்களுடன் நான் விளையாடியிருக்கிறேன். அவர்கள் எனக்கு நிறைய அறிவுரை கொடுத்து இருக்கிறார்கள். ரிவர்ஸ் ஸ்வீப் எப்போதும் நான் சிறப்பாக விளையாடுவேன். ஆனால் இம்முறை அப்படி விளையாடி அவுட்டானது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டாம் கரன் வீசிய பந்தை சிக்சருக்கு அடித்தபோது இந்த போட்டியின் மீது எனக்கு நம்பிக்கை பிறந்தது.

ishan 2

அதன் பின்பு நான் என்னுடைய ஆட்டத்தை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நான் இந்த இடத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்நிலையில் தான் அரைசதம் கடந்த போது கோலியுடன் நடைபெற்ற ஒரு சுவாரசியமான அனுபவத்தை இஷன் கிஷன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் சாஹல் எடுத்த ஒரு பேட்டியில் கூறியதாவது : நான் அரை சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை. அப்போது மிகவும் பதட்டமாக இருந்தேன். இருப்பினும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த பின்னர் விராட் கோலி என்னிடம் வந்து “டாப் இன்னிங்ஸ்” என்று கூறினார். மேலும் நான் அரைசதத்தை கடந்த பின்னர் எப்பொழுதும் பேட்டை உயர்த்திக் காண்பிக்க மாட்டேன் அது என்னுடைய வழக்கம்.

ishan 1

ஆனால் விராட் கோலி எனது பின்னால் நின்று “பேட்டை உயர்த்தி நான்குபுறமும் உள்ள ரசிகர்களின் முன் உனது அரைசதத்தை கொண்டாடு. இதுதான் உன்னுடைய முதல் போட்டி இதை நீ அனைவருக்கும் காண்பித்து ஆகவேண்டும்” என்று கூறினார். அதன் பிறகே நான் பேட்டை உயர்த்தினேன். அப்படி கோலி சொன்னது எனக்கு அவர் ஒரு கேப்டனாக ஆர்டர் செய்வது போன்று இருந்தது. அதன் பின்னரே நான் இந்த அரை சதத்தை கொண்டாடினேன் என இஷான் கிஷன் ஜாலியாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement