தோனி மீண்டும் இந்திய அணிக்குள் வந்தா ? இந்த 2 பேருக்கும் என்ன பதில் ? – இர்பான் பதான் கொந்தளிப்பு

Irfan-pathan
- Advertisement -

இந்திய அணிக்காக இனி தோனியால் விளையாடவே முடியாது என்ற நிலை வந்துவிட்டது. இந்நிலையில் இப்படி இருந்தும் அவரை தேர்வு செய்தால் இந்த இரண்டு இந்திய வீரர்களுக்கு கண்டிப்பாக பதில் சொல்லியே தீரவேண்டும் என இர்பான் பதான் கொந்தளித்துள்ளார்.

Dhoni-1

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது விக்கெட் கீப்பர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் இருவரும் மாறிமாறி தங்களது பணியை செய்கிறார்கள். குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருவரும் தோனி விட்ட இடத்தை மாறி மாறி பூர்த்தி செய்து வருகின்றனர்.

தோனி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்திய அணிக்காக ஆடவில்லை. அவரது பெயரையும் அவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்க கொடுக்கவில்லை. இதன் காரணமாக பிசிசிஐ அவரை ஒப்பந்தம் பட்டியலில் இருந்து நீக்கியது. ஆனாலும் ஓய்வினை அறிவிக்கவில்லை. 2020ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆட தோனி திட்டம் தீட்டி வருகிறார் என்று அனைவருக்கும் தெரிந்ததே.

dhoni with pant

இதே கருத்தை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷியும் உறுதி செய்தனர். ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடர் நடப்பது பெரும் கேள்விக்குறி ஆகிவிட்டது. கரோனா வைரஸ் காரணமாக அவரது இந்த கனவும் நடக்காது போலிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் இர்பான் பதான் கூறியதாவது….

- Advertisement -

தோனி நிச்சயம் கிரிக்கெட் ஆட வேண்டும் இந்திய அணிக்காக மீண்டும் அவர் ஆடுவதை அனைவரும் பார்க்க வேண்டும். நம்மிடம் இருக்கும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் அவர் நம் நாட்டிற்காக நிறைய செய்துள்ளார். கிரிக்கெட் உலகத்திற்கு நிறையவும் கொடுத்து இருக்கிறார்.
இருப்பினும் தற்போது தோனி இளம் வீரர்களுக்கு வழிவிடும் நேரமாக தேர்வுக்குழு இதனை பார்க்கிறது.

ஆனால் திடீரென இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அணியில் தொடர்ந்து ஆடும் ராகுல் மற்றும் ரிஷப் பந்திற்கு பதில் என்ன? அவர்களுக்கு இது நியாயமாக இருக்குமா என்ன? அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரிவித்துள்ளார் பதான்.

Advertisement