இந்திய அணியின் முக்கிய வீரர் இவர்தான். இவரது சாதனைகள் இதோடு நிற்காது – இர்பான் பதான் உறுதி

Irfan-pathan
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் வெற்றிகரமாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கோப்பைகள் என அனைத்து கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியது.

Ind-1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இந்திய அணியின் முக்கிய வீரர் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய அணியில் தற்போதைக்கு பும்ரா தான் முக்கியமான வீரர் ஏனெனில் இந்த தொடரில் அவர் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமின்றி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

மேலும் ஒருவேளை பும்ரா இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றால் அது பெரிய இழப்பாக இருந்திருக்கும். அவர் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான பங்கை தற்போது கொடுத்து வருகிறார். அவரை போன்ற ஒரு வீரர் கிடைத்தது நமக்கு கிடைத்த வரம் என்று கூறுவேன். மேலும் இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக பந்து வீசுகிறார்.

Bumrah

மேலும் இந்த ஹாட்ரிக் சாதனையுடன் பும்ரா தனது சாதனைகளை நிறுத்தி கொள்ளமாட்டார். அவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை படைப்பார் என்று நான் உறுதியாக கூறுகிறேன் என்று பதான் கூறினார். இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement