இவர் விளையாடுவதை நான் காசு குடுத்து கூட பார்க்க தயார். என்ன பவுலர்ங்க அவரு – இர்பான் பதான் பதிவு

pathan 1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 12-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் குவித்து அசத்திய பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியானது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது 109 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் ஆகி 143 ரன்கள் பின்தங்கியது. அதன் பின்னர் தற்போது இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்திய மண்ணில் அவர் எடுத்த முதல் 5 விக்கெட் இது என்றாலும் அதேவேளையில் கபில் தேவின் மிகப்பெரிய சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

அதன்படி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களாக கபில் தேவ் மற்றும் பும்ரா ஆகிய இருவர் மட்டும்தான் 29 டெஸ்ட் போட்டிகளில் 8 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்களாக திகழ்கின்றனர். மேலும் இலங்கை அணிக்கு எதிராக குறைந்த ரன்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் பும்ரா இன்று படைத்துள்ளார். இந்த போட்டியில் அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்த வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து கொண்டார்.

- Advertisement -

இப்படி இவரது இந்த சிறப்பான பந்து வீச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் பும்ராவிற்கு வாழ்த்தினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில் :

ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசுவதை நேரில் பார்க்க நான் காசு கொடுத்து கூட போட்டியை காண தயார். என ஒரு சிறப்பான பந்து வீச்சாளர் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement