அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து கூறிய கதை விக்ரமுக்கு பிடித்துவிடவே அதில் கதாநாயகனாக நடிகர் விக்ரம் ஒப்பந்தமானார்.
லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரிய முதலீட்டில் உருவாகும் படம் என்பதால் வெளிநாடுகளில் இதற்கான படப்பிடிப்பு இடங்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது. ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Welcome on board @IrfanPathan
Can’t wait to unleash your new avatar to the audience!! Time for some solid action!! ???????????????????????? #ChiyaanVikram58 @Lalit_SevenScr @arrahman @sooriaruna @iamarunviswa @proyuvraaj @LokeshJey https://t.co/6R7nMAhUwA pic.twitter.com/x528YI9x8H— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) October 14, 2019
மேலும் இந்த படத்தில் இர்பான் பதான் துருக்கி நாட்டை சேர்ந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கப்போகிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் இர்பான் பதானுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.