இந்திய வீரர்களான இந்த இரண்டு பேரையும் பாத்து பாகிஸ்தான் வீரர்கள் கத்துக்கனும் – இன்சமாம் உல் ஹக் பேட்டி

Inzamam
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. படு திரில்லாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை வென்று சாதித்தது.

IndvsNz

- Advertisement -

இந்நிலையில் நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையே நான்காவது டி20 போட்டி வெலிங்டனில் நடைபெற உள்ளது. இந்திய அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக்கும் இந்திய அணியை பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய கிரிக்கெட் அணியில் 2 மிகப்பெரிய வீரர்கள் உள்ளனர். கோலி மற்றும் ரோகித் சர்மா அந்நிய மண்ணில் சிறந்த வீரர்களாக விளங்குகின்றனர். இந்த இரண்டு வீரர்களால் மட்டுமே வெற்றி கிடைக்காது. இளம் வீரர்களான ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தங்களது பேட்டிங்கில் இந்திய அணிக்கு பங்கு வகிக்கின்றனர்.

Rohith-2

மேலும் பவுலிங்கில் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் இந்திய அணியில் வேகத்தில் மிரட்டுகின்றனர். சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் இந்திய அணி முற்றிலும் ஒரு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டனாக அவரது அணியை சரியாக அணுகுகிறார். அவரது ஆக்ரோஷத்தை அணிக்குள்ளும் புகுதியுள்ளார். ரோஹித் மற்றும் கோலி ஆகியோரை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement