கடைசி டி20 போட்டி : இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் – பிளேயிங் லெவன் இதோ

rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsNZ 1

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணி இளம் வீரர்களை வைத்து அவர்களின் திறனை பரிசோதிக்கும் என்று தெரிகிறது. கடைசி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை முழுவதுமாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அந்த வகையில் இன்றைய போட்டியில் மூன்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல் ராகுலின் பேட்டிங் பார்ம் சிறப்பான இருப்பதனாலும் தொடர்ச்சியாக விளையாடி வருவதாலும் அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் திறனை பரிசோதிக்க வாய்ப்பு வழங்கலாம் என்று தெரிகிறது.

gaikwad

அதேபோன்று அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஆவேஷ் கானுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல் / ருதுராஜ் கெய்க்வாட், 3) சூரியகுமார் யாதவ், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிஷப் பண்ட், 6) வெங்கடேஷ் ஐயர், 7) அக்சர் படேல், 8) அஷ்வின் / சாஹல், 9) ஹர்ஷல் படேல், 10) புவனேஷ்வர் குமார் / ஆவேஷ் கான், 11) தீபக் சாகர்

Advertisement