2020 டி20 உலகக்கோப்பைக்காக இந்திய அணி தயார்படுத்தவுள்ள 5 இளம் வீரர்கள் இவர்கள் தான் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து ஏமாற்றத்தை அளித்தது. எனவே தற்போது அனைவரின் பார்வையும் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரின் மீது உள்ளது.

Jadeja

- Advertisement -

முதல் உலக கோப்பை டி20 தொடரை இந்திய அணி வென்றது. அதன்பின் 5 உலக கோப்பை டி20 சீசனில் கடைசியாக நடந்த 2016ல் மட்டுமே இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி 20 எப்போதும் வலிமை மிக்கதாகவே இருக்கும். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 தொடருக்காக 5 இளம் வீரர்களை இந்திய அணி தயார்படுத்த உள்ளது.

அதன்படி பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் நவ்தீப் சைனி, ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் கோபால், டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர், சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கலில் அகமது மற்றும் மும்பை அணிக்காக விளையாடி வரும் ராகுல் சாகர் ஆகியோரை இந்திய அணி இந்த வருடம் தயார்படுத்த உள்ளது.

Iyer

இவர்கள் அனைவரும் அவர்களது அணிகளுக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களை நன்கு மேம்படுத்தி அடுத்து வரும் டி20 தொடரில் இந்திய அணியில் சேர்த்து விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் திட்டத்தை வைத்துள்ளதாக தெரிகிறது.

Advertisement