இந்த ரெண்டு பேர்ல யாரு அவுட்ன்னு நீங்களே சொல்லுங்க. இந்திய அணி வீரர்கள் செய்த தவறு – வைரல் வீடியோ

Ind-u-1
- Advertisement -

19 வயதுக்குட்பட்டோருக்கான இளைஞர் உலக கோப்பை போட்டியில் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி எளிதாக வெற்றி பெற்றது. இது வங்கதேச அணிக்கு முதல் உலகக் கோப்பை வெற்றி என்பதால் அந்த அணியின் வெற்றி கொண்டாட்டம் மிகவும் அதிகமாயிருந்தது.

ind u 19

- Advertisement -

இதே போட்டியின் போது இந்திய அணி பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு சில தடுமாற்றங்களை நிகழ்த்தியது. இரண்டு வீரர்கள் ஒரே திசையில் உள்ள க்ரீசில் சென்று தங்களது விக்கெட்டை காத்துகொள்ளும் அளவிற்கு அந்த தடுமாற்றங்கள் இருந்தது.

43 ஓவரின் 2வது பந்தை ஜுரேல் எதிர்கொண்டார் அந்த பந்தலில் ஆப் சைடில் தட்டிவிட்டு ரன் ஓடினார். எதிர் திசையில் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் அதர்வா தயங்கி கொண்டு ஓடத் துவங்கினார். பந்தை பிடித்த பீல்டர் உடனடியாக கீப்பரிடம் வீசினார். இதனைக் கண்டதும் அதர்வா பின்வாங்கினார். இதன் காரணமாக இருவருக்கும் குழப்பம் ஏற்பட்டு பின்னர் இருவரும் தங்களது விக்கெட்டை காத்துக்கொள்ள பௌலிங் திசையில் சென்று ஒரே நேரத்தில் பேட்டை வைத்தனர்.

Log In or Sign Up to View

இருவரும் ஒரே நேரத்தில் பேட்டை கிரீஸில் வைத்ததால் யாருக்கு அவுட் கொடுப்பது என தெரியாமல் நடுவர் திணறினார். இறுதியில் பேட்ஸ்மேனான ஜுரேலுக்கு அவுட் கொடுத்தார் ஏனெனில் அவர்தான் பந்தை அடித்தார் அவர் சரியாக அவர் பேட்டிங் திசையில் உள்ள கிரீசில் இருந்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லை எனவே அவருக்கு அவுட் கொடுத்து தீர்ப்பளித்தார்.

Advertisement