இவரை ஏன் இன்னும் அணியில் வச்சிருக்கீங்க. மொதல்ல அவரை டீம்ல இருந்து தூக்குங்க – ரசிகர்கள் வேண்டுகோள்

ind
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 3 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் கைப்பற்றிய இந்திய அணி 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND

- Advertisement -

அந்த வகையில் துவக்க வீரராக ப்ரித்வி ஷாவிற்கு பதிலாக கெய்க்வாட் அல்லது படிக்கல் ஆகிய ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்திய அணியில் இருக்கும் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற எதிர்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே பார்ம் இன்றி தவித்து வரும் அவர் விக்கெட் வீழ்த்த மிகவும் சிரமப்பட்டு வருகிறார். முதல் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தாலும் இரண்டாவது போட்டியின் போது மீண்டும் தனது மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன.

Kuldeep

மோசமாக விளையாடும் ஒருவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதை விட இளம்வீரரான ராகுல் சாஹருக்கு வாய்ப்பளிக்கும்படி ஆதரவுகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பல முன்னணி வீரர்களை தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் வீழ்த்தி வரும் ராகுல் சாகர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்தாலும் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

Chahar 1

எனவே குல்தீப் யாதவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ராகுல் சாகருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் குல்தீப் யாதவ் இழந்த தனது பார்மை மீட்டெடுப்பார் என்று இந்திய அணி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement