யாரும் கவலைப்படாதீங்க. காயமடைந்த ரோஹித் சர்மாவை மோசமாக கலாய்க்கும் ரசிகர்கள் – என்ன ஆனது?

Rohit-Sharma-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றியை பெற்றிருந்த பங்களாதேஷ் அணியானது இன்று இரண்டாவது போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி இன்று துவங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பங்களாதேஷ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் மெஹதி ஹாசன் ஆட்டம் இழக்காமல் 100 ரன்களையும், முகமதுல்லா 77 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணியானது தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது ஓவரின் போது கட்டை விரலில் காயம் அடைந்த ரோகித் சர்மா மைதானத்தில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட வெளியேறினார். அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்ட ரோகித் சர்மா மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை. அதேபோன்று தற்போது இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து வரும் வேளையில் அவர் இன்னும் பேட்டிங்கிலும் களமிறங்கவில்லை.

இந்நிலையில் ரோகித் சர்மா இப்படி காயத்தால் அவதிப்பட்டு விளையாட முடியாமல் இருக்கும் வேளையில் இந்திய ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் கேப்டனான அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டுள்ள பதிவில் : ரோஹித் சர்மா இந்திய அணிக்காக விளையாடுவதை விட காயம் காரணமாக ஓய்வில் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்றும் இனி மேல் ரோகித் சர்மா இந்திய அணியின் கிரிக்கெட்டிற்கு செட்டாக மாட்டார் என்றும் காட்டமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அதிலும் ஒரு படி மேலே சென்ற கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் அவர் ஐபிஎல் 2023-ஆம் ஆண்டு சீசனுக்காக தயாராகி வருவதால் தற்போது காயமடைந்து வெளியேறியுள்ளார் என்றும் யாரும் கவலைப்பட வேண்டாம் மீண்டும் அவர் ஐபிஎல் தொடரில் ஃபிட்டாக வருவார். அதில் அனைத்து போட்டிகளிலும் அவர் பங்கேற்று விளையாடுவார் என்று அவரை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

இப்படி ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்படுவது புதிது கிடையாது. ஏனெனில் முழு நேர கேப்டனாக ரோகித் பதவியேற்ற பிறகு பல்வேறு தொடர்களில் அவருக்கு இதேபோன்று தொடர் காயங்கள் ஏற்பட்டு அவ்வப்போது அவர் போட்டிகளை தவற விட்டு வருவதால் ரசிகர்கள் இப்படி ரோகித் சர்மாவை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement