ஒரே ஆள் மொத்த டீமும் க்ளோஸ். ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான இந்திய வீரர் – விவரம் இதோ

Krunal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணியானது தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்த நிலையில் இந்த டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்ற அருமையான வாய்ப்பு இருந்தது.

Dhawan

- Advertisement -

முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்திய இந்திய அணி ஆனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவர்களை வீழ்த்தி 3 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அவர் அவரோடு மட்டுமின்றி இந்திய அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், தீபக் சாஹர், ப்ரித்வி ஷா, சாஹல் போன்ற முக்கியமான 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட காரணமாக அமைந்தார்.

Krunal-1

இதன் காரணமாக கடைசி இரண்டு டி20 போட்டியிலும் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பலர்களுடன் களமிறங்கியது. இதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு காரணம் க்ருனால் பாண்டியா தான் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டு க்ருனால் பாண்டியாவை விமர்சித்து வருகின்றனர்.

krunal

அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாகவே தற்போது முக்கிய வீரர்கள் இந்த தொடரில் விளையாட முடியாமல் போனதால் இந்த தோல்வி ஏற்பட்டது என்றும் அவர் மட்டும் எந்த பாதிப்பையும் சந்திக்காமல் இருந்திருந்தால் இந்திய அணியின் டி20 தொடரையும் கைப்பற்றியிருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement