பண்ட், சாம்சன் உட்பட 5 வீரர்களுக்கு இடமில்லை. அதிரடி காட்டிய கோலி. டாஸ் வென்று பீல்டிங் தேர்வு – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று ஆக்லாந்து மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

IndvsNz

- Advertisement -

தற்போது டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார். அதன்படி பேசிய கோலி கூறியதாவது : நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். இந்த மைதானம் பேட்டிங்க்கு ஒத்துழைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். இப்பொழுது நாங்கள் விளையாட தயாராக இருக்கிறோம்.

5 வீரர்கள் அணியில் இன்று விளையாடவில்லை. குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன் மேலும் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடவில்லை. சூழ்நிலையைப் பொறுத்தே அணியில் தேர்வு அமைந்துள்ளது. இந்த போட்டியில் முக்கிய வீரர்களான பண்ட் மற்றும் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

India (Playing XI): Rohit Sharma, Lokesh Rahul(w), Virat Kohli(c), Shreyas Iyer, Manish Pandey, Shivam Dube, Ravindra Jadeja, Shardul Thakur, Jasprit Bumrah, Yuzvendra Chahal, Mohammed Shami

இவர்கள் இருவரது நீக்கம் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர் உடன் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement