பேருக்கு தான் நம்பர் ஒன் டீம் ஆனால் அந்த விஷயத்தில் இலங்கையை விட இந்தியா மோசம் – ரவி சாஸ்திரி வருத்தம்

Shastri
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் போட்டி போட காத்திருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்வதற்காக ஒரு வாரம் முன்னதாகவே ஆஸ்திரேலியா பயணத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அங்கு பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக்கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்ற இந்தியா தரவரிசையின் படி உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக இத்தொடரில் களமிறங்குகிறது.

INDIA Dinesh Karthik Chahal Arshdeep Singh Harshal Patel Bhuvaneswar Kumar Rohit Sharma

- Advertisement -

ஆனாலும் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற உறுதியான நம்பிக்கை பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் இல்லை. காரணம் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தாத ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் அடங்கிய அணி நிர்வாகம் மாற்றங்கள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளது. மற்றொன்று முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது ஆரம்பத்திலேயே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் 130 கி.மீ வேகத்தில் மட்டும் வீசுபவர்களாக இருப்பதுடன் டெத் ஓவர்களில் வள்ளலாக ரன்களை வாரி வழங்குகின்றனர்.

இலங்கையை விட மோசம்:
எனவே இத்தொடரில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு பேட்டிங் துறை சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் பேட்டிங், பவுலிங் என்பதைத் தாண்டி உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கவலை தெரிவித்துள்ளார். ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அதில் அற்புதமாக செயல்பட்டு வெற்றியை தீர்மானிக்கும் 10 – 15 ரன்களை மிச்சப்படுத்தி வெற்றி பெறுவதாக கவலை தெரிவிக்கும் அவர் சமீபத்திய ஆசிய கோப்பையை இலங்கை வெல்வதற்கும் அதுவே காரணமென்று கூறியுள்ளார்.

Rohit Sharma Arshdeep Singh

இதனால் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் போன்றவர்கள் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவதற்கு எக்ஸ்ட்ராவாக 20 ரன்களை எடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த அணியுடன் கடந்த 6 – 7 வருடங்களாக நான் இருந்துள்ளேன். முதலில் பயிற்சியாளராக இருந்த நான் தற்போது வெளியிலிருந்து பார்க்கும்போது டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே தற்போதுள்ள பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ளது. 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், 5வது இடத்தில் ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பண்ட், 6வது இடத்தில் தினேஷ் கார்த்திக் இருப்பது பேட்டிங் துறையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது”

- Advertisement -

“ஆனால் பீல்டிங் துறையை கையிலெடுத்து இப்போது முதலே இந்தியா கடுமையான பயிற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக பீல்டிங் துறையில் இந்திய அணியினர் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனெனில் அதில் மிச்சப்படுத்தும் 15 – 20 ரன்கள் வெற்றியில் உங்களை காப்பாற்றும். இல்லையேல் ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பேட்டிங் செய்யும் போது எக்ஸ்ட்ராவாக 15 – 20 ரன்கள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்”

“மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் மாயாஜால பீல்டிங் செய்கின்றன. குறிப்பாக சமீபத்திய ஆசிய கோப்பையில் இலங்கை பீல்டிங் துறையில் என்ன செய்தது என்பதை பாருங்கள். அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் அபாரமான பீல்டிங் செய்ததன் காரணமாகவே குறைந்த அளவிலான வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை பதிவு செய்தனர்” என்று கூறினார்.

அவர் கூறுவது சமீபத்திய ஆசிய கோப்பையில் சுமாரான பீல்டிங் என்பதையும் தாண்டி நிறைய கேட்ச்களை முக்கிய நேரத்தில் இந்தியாவுக்கு கோட்டை விட்டது தோல்வியை பரிசளித்தது. ஆனாலும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இந்திய பீல்டிங் துறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் வீரர்களை விட பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகமாக கொண்டுள்ள இந்திய அணியில் பீல்டிங் பயிற்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று சமீப காலங்களாகவே இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement