சச்சினுக்கே ஏகப்பட்ட சோதனை வந்துச்சு.. இந்திய அணி சீக்கிரம் அதை செய்யும்.. ரவி சாஸ்திரி கருத்து

Ravi Shastri
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை இந்திய அணி தவற விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

இத்தனைக்கும் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக அசத்திய இந்தியா செமி ஃபைனலில் நியூசிலாந்தை முதல் முறையாக தோற்கடித்து தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்தது. ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற முக்கியமான இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை தவற விட்டது.

- Advertisement -

ரவி சாஸ்திரி நம்பிக்கை:
அந்த வகையில் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் செய்து வரும் அதே சொதப்பலை மீண்டும் அரங்கேற்றிய இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரே முதல் உலகக் கோப்பை வெல்வதற்கு 6 முறை காத்திருந்ததாக தெரிவிக்கும் ரவி சாஸ்திரி விரைவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா விரைவில் உலக கோப்பையை வெல்வதை நான் பார்ப்பேன். அது 50 ஓவர் உலகக் கோப்பையாக இருக்காது. ஏனெனில் நீங்கள் மீண்டும் அதற்கான அணியை உருவாக்க வேண்டும். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் வெற்றி பெறும் அளவுக்கு இந்தியாவிடம் சவாலான திறமைகள் இருக்கிறது. ஏனெனில் உங்களிடம் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் நிறைந்து இருக்கின்றனர்”

- Advertisement -

“அதில் நீங்கள் கவனம் மட்டும் செலுத்த வேண்டும். மேலும் 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டும் நாம் கடைசியில் வெல்ல முடியாதது இன்னும் வலியை கொடுக்கிறது. ஏனெனில் நாம் வலுவான அணியாக செயல்பட்டோம். குறிப்பாக பவுலர்கள் தொடரின் இடை பகுதியில் உயிரே எழுந்து நின்றதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்ததாக நீங்கள் கருதினீர்கள். ஆனால் எதுவும் எளிதாக கிடைத்து விடாது”

இதையும் படிங்க: சச்சினுக்கே ஏகப்பட்ட சோதனை வந்துச்சு.. இந்திய அணி சீக்கிரம் அதை செய்யும்.. ரவி சாஸ்திரி கருத்து

“டெண்டுல்கர் தம்முடைய ஒரு உலகக் கோப்பையை வெல்வதற்கு 6 முறை காத்திருந்தார். அந்த வகையில் நீங்கள் உலகக் கோப்பையை எளிதாக வெல்ல முடியாது. அதற்கு நீங்கள் குறிப்பிட்ட நாளில் தைரியமான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். மாறாக லீக் சுற்று போன்ற முந்தைய செயல்பாடுகள் முக்கியமல்ல” என்று கூறினார்.

Advertisement