இந்திய அணி அடுத்து விளையாட இருக்கும் பிங்க் பால் டெஸ்டுக்கான அறிவிப்பு வெளியானது – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

இந்திய அணி தனது முதல் பிங்க் பால் பகலிரவு டெஸ்ட் போட்டியை கடந்த நவம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக கொல்கத்தா மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. மேலும் அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணி விளையாட இருக்கும் இரண்டாவது பகலிரவு டெஸ்ட் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்த கிரிக்கெட் தொடரின் டெஸ்ட் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நியூசிலாந்துக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. மேலும் பல பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாடியும் அனுபவம் கொண்ட அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது. இருப்பினும் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ind 1

மேலும் ஏற்கனவே கேப்டன் கோலி ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள எந்த பயமும் இல்லை என்று கூறியிருந்தார். எனவே இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement