இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தவான் 36 ரன்கள் குவித்தார் மற்றபடி இந்திய அணி வீரர்கள் ஒருவர்கூட 20 ரன்களை கடக்கவில்லை.
அதன் பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 140 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி பெற்ற வெற்றி மூலம் இந்த டி20 தொடரை அந்த அணி சமன் செய்தது. இதன்மூலம் இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஒரு மோசமான சாதனையை தொடர்ந்து வருகிறது. அதுயாதெனில் இதுவரை இந்திய அணி இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெற்றதே கிடையாது.
மேலும் கடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி வென்றது தான் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி இந்திய மண்ணில் பெற்ற முதல் டி20 வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.