INDIA : நியூசிலாந்து போட்டியால் இந்திய அணிக்கு ஏற்பட்ட புதிய தலைவலி – காரணம் இதுதான்

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி

Kohli
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று மதியம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 3 மணிக்கு நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

rain

- Advertisement -

இதன் காரணமாக மூன்று போட்டிகளில் வென்ற நியூசிலாந்து அணி புள்ளிகளுடன் முதலிடத்திலும் இரண்டு வெற்றி மற்றும் இந்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 5 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அது யாதெனில் நியூசிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகளில் வென்று நேற்றைய போட்டியில் ஒரு புள்ளியுடனும் மொத்தம் 7 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் மீதி உள்ள 5 போட்டிகளில் மூன்றில் வென்றால் கூட புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடத்துக்குள் நியூசிலாந்து அணி இருக்கும்.

Bhuvi

ஆனால் இந்திய அணிக்கு இது பலவீனம் தான் ஏனெனில் தற்போது இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்றைய போட்டி ஒருவேளை நடந்து இருந்தால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே தற்போது ஒரு வெற்றி தேவையில்லாமல் இந்திய அணியிடம் பறிபோயுள்ளது. இதனால் மீதிவரும் போட்டிகளில் இந்திய அணி கவனமாக விளையாட வேண்டும். ஏனெனில் மழையின் காரணமாக இனிவரும் போட்டிகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

Advertisement