25 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி செய்த மகத்தான சாதனை – விவரம் இதோ

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Saha 1

- Advertisement -

அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாலோ ஆன் கொடுக்க மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் தென்னாபிரிக்க அணி 203 ரன்கள் பின் நிலையில் உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய சாதனை ஒன்றினை செய்துள்ளது. அந்த சாதனை யாதெனில் புனே டெஸ்ட்டை தொடர்ந்து தற்போதைய ராஞ்சி டெஸ்டிலும் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு பாலோ ஆன் வழங்கியது. இதன்மூலம் அடுத்ததடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு போலோ ஆன் கொடுத்து இந்திய அணி அசத்தியது.

Umesh 3

இதற்கு முன்னர் இந்திய அணி 1993-94 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு பாலோ ஆன் (லக்னோ மற்றும் பெங்களூர்) போட்டியில் கொடுத்தது. அதன் பின்னர் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்த தொடரில் செய்துள்ளது.

Advertisement