பாவங்க நியூசிலாந்து. ராசியே இல்ல போல. திக்திக் சூப்பர் ஓவர் இந்தியா வெற்றி – விவரம் இதோ

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்துள்ளது.

Rohith

- Advertisement -

திகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களையும், கேப்டன் கோலி 38 ரன்களும் குவித்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணி நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் நியூசி வீரர் குப்தில் 31 ரன்கள், முன்ரோ 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் தனி ஆளாக நின்று 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் என 95 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்று வந்து கடைசி ஓவரின் 3-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.அதனைத் தொடர்ந்து ஷமி வீசிய அந்த கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரோஸ் டைலர் போல்டாகி ஆட்டமிழக்க போட்டி விறுவிறுப்பான இப்போட்டி டையில் முடிந்தது.

Williamson

பிறகு சூப்பர் ஓவரை இந்திய அணியின் பும்ரா வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்கள் குவித்தது. பின்னர் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்ததால் கடைசி 2 பந்துக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் இந்திய 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Advertisement