ரொம்ப பாவங்க அவங்க. மீண்டும் சூப்பர் ஓவர். இந்தியா த்ரில் வெற்றி – நியூஸிக்கு டைம் சரியில்லை

Rahul-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டி20 போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் குவித்தார்.

Pandey

- Advertisement -

அதன்பிறகு 166 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 165 ரன்கள் அடித்து போட்டி டை ஆனது. அதிகபட்சமாக துவக்கவீரர் முன்ரோ 64 ரன்கள் குவித்தார். சைபர்ட் 57 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ரன்அவுட் ஆனார். மேலும் ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதி ஓவரை வீசிய தாகூர் சிறப்பாக வீசி போட்டியை டை ஆக்கினார். கடைசி ஓவரில் 2 ரன்அவுட்களுடன் சேர்த்து 4 விக்கெட் வீழ்ந்தது.

பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 13 ரன்கள் அடித்தது. அதனை தொடர்ந்து 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய இந்திய அணி ராகுல் 10 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேற மீண்டும் பதட்டம் தொற்றி கொண்டது. பிறகு கோலி வெற்றிக்கு தேவையான ரன்களை அடிக்க இந்திய அணி வெற்றி பெற்றது.

munro

இந்த த்ரில் வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கிட்டத்தட்ட தோற்றே விட்டது என்று நினைத்த இந்த போட்டியில் இந்திய அணி இறுதியில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் கடந்த போட்டியில் கூறியது போல இந்த போட்டியிலும் சூப்பர் ஓவர் அந்த அணிக்கு கைகொடுக்கவில்லை. இந்த போட்டியிலும் அவர்களது சோகம் தொடர்ந்தது.

Advertisement