இந்தியா – இலங்கை இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்காது. போட்டி ஒத்திவைப்பு – காரணம் இதுதான்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரிலும் 10 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

varun

- Advertisement -

இந்நிலையில் இன்று 27ஆம் தேதி நடைபெற இருந்த 2வது டி20 போட்டி ஆனது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் ஒத்திவைக்கப்பட காரணம் யாதெனில் இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக க்ருனால் பாண்டியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டியில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த தொடர் துவங்க இருந்த போது இங்கிலாந்து சென்று திரும்பிய இலங்கை அணியின் வீரர்கள் சிலருக்கும் பயிற்சியாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

krunal

இந்நிலையில் தற்போது இந்திய வீரரான க்ருனால் பண்டியாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் ஒருமுறை இந்தத் தொடரில் தேதிகள் மாற்றமடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement