இந்தியா இலங்கை டி20 போட்டி துவங்குவதில் ஏற்பட்ட தாமதம் – விவரம் இதோ

Ind1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 3 டி20 தொடரின் முதல் போட்டி இன்று இன்னும் சிறிது நேரத்தில் கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற உள்ளது/ இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன.

Toss

தற்போது டாஸ் போடப்பட்டு இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டாசுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். இந்த மைதானத்தில் அதிகம் விளையாடியது இல்லை என்றாலும் கடந்த முறை விளையாடியபோது சேசிங் செய்வது சிறப்பாக இருந்தது.

- Advertisement -

நாங்கள் அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக சேசிங் செய்தோம் எனவே இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து செட் செய்ய முடிவு செய்திருக்கிறோம். மைதானத்தின் சூழ்நிலையும் எவ்வாறு அமையும் என்பது போட்டியின் போது தான் தெரியும் என்று கூறியிருந்தார்.

Rain

இந்நிலையில் போட்டி துவங்க கொஞ்சநேரம் இருந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. மழையின் தாக்கம் சற்று அதிகமாகி இருப்பதால் போட்டி துவங்க இன்னும் நேரம் கடக்கும் எண்டு கூறப்படுகிறது. மேலும் மழையின் காரணமாக போட்டியின் ஓவர்களும் குறைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement