இந்தியா இலங்கை முதல் டி20 போட்டியில் ரசிகர்கள் இதை எல்லாம் மைதானத்தில் செய்யக்கூடாது – ரூல்ஸ் போட்ட மைதான நிர்வாகம்

Fans
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை ஜனவரி 5 அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

IND

- Advertisement -

நாளை இரவு 7 மணிக்கு துவங்க உள்ள இந்த போட்டிக்கான ரசிகர்களின் கட்டுப்பாடு அம்மாநில கிரிக்கெட் நிர்வாகத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை உணர்த்தும் போர்டுகள், போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் பெயரை எழுதும் எந்தவித மார்க்கரோ, பேனாவோ எடுத்து வரக்கூடாது என்றும் மேலும் எந்தவொரு செயல்பாட்டையும் போஸ்டராக வெளிக்காட்டக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

இதற்கு காரணம் யாதெனில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் தற்போது கடுமையான போராட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தற்போது கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது எழுதி காண்பித்தால் சர்வதேச போட்டிகளில் அளவில் பார்க்கப்படும் போட்டி என்பதால் இது பல நாடுகளுக்கு சென்று அடையும் எனவே ரசிகர்களின் எந்தவித சர்ச்சையான விடயத்தையும் வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்ற காரணத்தினால் ரசிகர்களுக்கு இம்மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ind fans

மேலும் மைதானத்திற்குள் செல்போன், கார் சாவி, பைக் சாவி மற்றும் பர்ஸ் ஆகியவை மட்டுமே எடுத்து வர அதிக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பேசிய அம்மாநில கிரிக்கெட் நிர்வாகியான சர்க்கார் கூறுகையில் : சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் அனைவரும் விழிப்புடன் இருந்து வருகிறோம். தேவையான போலீஸ் பாதுகாப்பு மைதானத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ind fans 1

இந்த போட்டியை காணவரும் ரசிகர்கள் இந்த போட்டியில் போஸ்டர்கள், பேனர்கள், மார்க்கர் மற்றும் பேனா என எதையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த போட்டியை காண 27 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன என்றும் ரசிகர்களின் ஆதரவு இந்த போட்டிக்கு அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

Advertisement