IND vs AUS : அவரோட விக்கெட்டை எடுத்ததில் அலாதியான மகிழ்ச்சி – ஆட்டநாயகன் முகமது ஷமி பேட்டி

Shami
- Advertisement -

கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 276 ரன்களை குவிக்க பின்னர் இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது பேட்ஸ்மேன்களின் மிகச்சிறப்பான பங்களிப்பு காரணமாக 48.4 ஓவர்களில் 5 விட்டுகளை மட்டும் இழந்து 281 ரன்கள் குதித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் மொத்தம் 10 ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டன் உட்பட 51 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய முகமது ஷமி கூறுகையில் :

இந்த போட்டியில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் நான் தொடர்ச்சியாக பெரிய ஸ்பெல்லை வீசினேன். அணியின் கேப்டன் கேட்டுக்கொண்டதாலும், போட்டியின் சூழ்நிலையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் நான் ஆரம்பத்திலேயே நான்கு ஐந்து ஓவர்கள் புதிய பந்தில் வீசியதில் மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நான் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான மிட்சல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தியதை மிகவும் ரசித்தேன். ஏனெனில் எப்பொழுதுமே ஒரு வேகப்பந்து வீச்சாளராக பேட்ஸ்மேனை அவுட் சைடு எட்ஜ் மூலம் விக்கெட் எடுக்கும் போது அது ஒரு அலாதியான சுகம் தான். இந்த போட்டியில் பந்து ஆரம்பத்தில் நன்றாக ஸ்விங் ஆனதால் ரசித்து பந்து வீசினேன். சரியான லென்த்தில் பந்து வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும் என்பதனாலேயே போட்டியின் துவக்கத்தில் நல்ல வேகத்தில் நல்ல இடங்களில் பந்துவீசினேன்.

இதையும் படிங்க : ஒரு ஸ்வீப் ஷாட் கூட ஆடமா ஆடுறது இதுதான் பர்ஸ்ட் டைம். அதுக்கு காரணமே இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

எங்களுடைய அணியில் உள்ள மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் எனக்கு நீண்ட காலமாக ஒரு நல்ல பிணைப்பு இருந்து வருவதால் அவர்களுடன் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன். அதுவும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இந்த போட்டியில் நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement