இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடப்பதில் சிக்கல் – வெளியான அதிர்ச்சி தகவல்

INDvsAUS
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு பயிற்சிகளை செய்து வருகிறது. மேலும் இந்த தொடருக்கான மூன்று விதமான அணி வீரர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர்.

INDvsAUS

- Advertisement -

ஆஸ்திரேலியாவிலும் சரியான பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பான முறையில் இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவாக அடுத்த மாதம் 17ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி நடைபெறுவதற்கான மைதானத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த போட்டியை காண மைதானத்திற்கு ரசிகர்கள் வர அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அளவு அதாவது 25 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால் தற்போது இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்பது போன்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் தெற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது ஐந்து பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில்தான் அடிலெய்டு மைதானம் இருக்கிறது. இதன் காரணமாக போட்டி நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அடிலெய்டு டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை வீரர்களின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் நாங்கள் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.

fans

மேலும் ஆஸ்திரேலிய எல்லைகளும் தற்போது தொடர் கட்டுப்பாட்டிற்குள் கண்காணிக்கப்பட்டு வருவதால் நிச்சயம் இந்த தொடர் சிக்கல் இல்லாமல் நடைபெறும் என்று அவர்கள் ஆறுதல் அளிக்கும் விதமாக தகவல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement