அண்டர் 19 அணிவீரர்களின் மோதல். இறுதிப்போட்டியில் ஏற்பட்ட பரபரப்பு – வைரலாகும் வீடியோ

Ind-u-19
- Advertisement -

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் வங்கதேச அணி மோதியது. இந்த போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

- Advertisement -

பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணி வீரர்கள் மைதானத்திற்கு ஓடிவந்து வெற்றியை கொண்டாடினர். அப்போது வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களை கடும் வார்த்தைகளால் கேலி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான வீரர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனை அடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் ஓடிவந்து வீரர்களை சமாதானப்படுத்தினார். வாக்குவாதம் அதிகரித்து மோதல் உண்டாகும் சூழ்நிலை உண்டானது.

மேலும் அதிகாரிகள் பலரும் மைதானத்திற்குள் ஓடிவந்து வீரர்களை எச்சரித்து அப்புறப்படுத்தினார் இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இளம் வீரர்கள் இதுபோன்று நடக்கக்கூடாது. அவர்கள் களத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement