3ஆவது ஒருநாள் போட்டி : இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலிரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsENG

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே போட்டி மிகப் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற ஆர்வம் காட்டும் என்பதால் இந்த போட்டியின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான மூன்றாவது அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த அணியை நாம் இங்கு உத்தேச பட்டியலாக காணலாம். அதன்படி கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இன்றைய போட்டியிலும் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் அதேபோன்று மிடில் ஆர்டரில் விராட்கோலி, ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரும் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

Rahul

பந்துவீச்சை பொறுத்தவரை ஷர்துல் தாகூர், புவனேஸ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பிடிப்பார்கள். தொடர்ந்து சொதப்பி வரும் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப்க்கு பதிலாக சாஹலும், க்ருனால் பாண்டியாவுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரம் இன்றைய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது.

Chahal

இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவான், 3) விராட் கோலி, 4) கே.எல்.ராகுல், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) புவனேஷ்வர் குமார், 9) ஷர்துல் தாகூர், 10) சாஹல், 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement