இந்திய வீரர்களின் தொடர் காயம். நலம்பெற வேண்டி விமர்சையாக வாழ்த்திய பெண் ரசிகை – வைரலாகும் புகைப்படம்

jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு முடித்துக்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாளில் 336 ரன்கள் குவித்து முடித்துக்கொண்டது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளது.

Thakur

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய பெண் ரசிகை ஒருவர் காட்டிய ஒரு பேனர் இணையத்தில் தற்போது டிரென்ட் ஆகியுள்ளது. அந்த பேனரில் என்ன வாசகம் எழுதப்பட்டு இருந்தது எனில் “விரைவில் நலம் பெற வேண்டும் டீம் இந்தியா” என்று எழுதி அந்த பதாகையை அவர் தாங்கிப் பிடித்து இருந்தார். இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது வைரல் ஆகி உள்ளன.

ஏனெனில் இந்த தொடர் ஆரம்பம் ஆனது முதலே இந்திய அணிக்கு காயம் ஒரு பெரும் சோதனையாக அமைந்துள்ளது. ஏனெனில் ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி, கேஎல் ராகுல், ஜடேஜா, அஷ்வின் மற்றும் விஹாரி என ஒரு பெரும் படையை காயத்தால் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் நான்காவது போட்டியிலும் சைனி காலில் காயம் ஏற்பட்டது. இப்படி இந்திய வீரர்கள் பலர் காயமடைந்து உள்ளதால் ஒரு அணியாக அவர்கள் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று அந்த பெண் மறைமுகமாக சுட்டிக் காண்பித்து விமர்சையாக அந்த பதாகையை ஏந்தி இருந்தார்.

Saini-1

இந்த தொடர் முடிந்து இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிராக 4 டெஸ்ட் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதனால் இந்திய வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதையே தான் அந்த ரசிகையையும் பதாகையில் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement