நீங்க செஞ்சது தப்பு. ஆமாம் தப்பு பண்ணிட்டோம் ஒத்துக்கொண்ட கோலி – அபராதம் விதித்த ஐ.சி.சி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

Thakur 1

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கடந்த இரு போட்டிகளாக நம்பமுடியாத வெற்றிகளை பெற்று வருகிறது. அதாவது இறுதி வரை சிறப்பாக விளையாடும் நியூசிலாந்து இறுதிநேரத்தில் ஆட்டத்தை கோட்டைவிட்டு போட்டி சூப்பர் ஓவர் வரை செல்கிறது. அப்படி சூப்பர் வரை சென்ற போட்டிகள் இரண்டிலும் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி 4 ஆவது டி20 போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதனை மறுப்பு தெரிவிக்காமல் கோலி ஏற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Thakur

அதன்படி நான்காவது போட்டியின்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தபோது இந்திய வீரர்கள் மெதுவாக பந்து வீசினார்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்பதனால் ஒரு ஓவருக்கு 10 சதவீதம் என இரண்டு ஓவர்களுக்கு 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement