அவரை டீம்ல எடுத்ததோட சரி. அவருக்கு ஏன் வாய்ப்பே தரமாட்ரீங்க ? – ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு

Abhimanyu-Easwaran
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டபோது பெங்கால் அணியை சேர்ந்த துவக்க வீரர்களான அபிமன்யு ஈஸ்வரனை இந்திய அணியில் தேர்வுக்குழு தேர்வு செய்தது. ஏற்கனவே பல தொடர்களில் தேர்வு செய்யப்பட்ட ஈஸ்வரன் இதுவரை இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து துவக்க வீரர் கில் நாடு திரும்ப உள்ள நிலையில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்திவி ஷா மற்றும் படிக்கல் ஆகியோரை மாற்று வீரர்களாக அனுப்பும்படி கேப்டன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் வைத்த கோரிக்கை தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

ஏனெனில் துவக்க வீரராக ஏற்கனவே பலமுறை அணியில் தேர்வு செய்யப்பட்ட அபிமன்யு ஈஸ்வரனுக்கு இதுவரை ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை ? என்றும் அவருக்கு திறமை இருந்ததால் தான் அணியில் தேர்வு செய்தீர்கள். அப்படி இருக்கையில் இதுவரை அவரை அணியில் விளையாட வைக்காமல் இருந்தது ஏன் ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

abhimanyu easwaran 1

அதுமட்டுமின்றி தற்போதைய இந்திய அணியில் ராகுல், அகர்வால் மற்றும் ஈஸ்வரன் ஆகிய மூன்று ஓப்பனர்கள் இருக்கும் நிலையில் மேலும் 2 வீரர்களை இந்தியாவிலிருந்து அனுப்புமாறு ஏன் கோரிக்கை வைக்கின்றனர் என்று ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி நிர்வாகத்திற்கு எதிராக தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

abhimanyu easwaran 2

மேலும் திறமை இருந்ததன் காரணமாக அணியில் தேர்வு செய்த ஒருவருக்கு இப்படி தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது தவறு என்றும் அவருக்கு ஆடும் லெவனில் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement