ஜடேஜா பண்ணது தப்பா ? அப்போ நீங்க பண்ணது என்ன ? – ஆஸ்திரேலிய செய்த தவறை சுட்டி காட்டிய ரசிகர்கள்

Jadeja-3
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் நேற்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

INDvsAUS

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் 51 ரன்களையும், இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தும் அசத்தினர். மொத்தத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் பின்ச் மற்றும் ஷார்ட் ஆகியோர் முறையே 35, 34 ரன்கள் அடித்தன.ர் இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோன்று ஜடேஜாவுக்கு பதிலாக பந்துவீசிய சாஹல் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டி20 தொடரில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Nattu

இந்நிலையில் இந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் விளையாடிய ஜடேஜா அதிரடியாக விளையாடி கொண்டிருந்தபோது அவரது தலையில் பந்து பலமாக தாக்கியது. இதன் காரணமாக அவர் நேற்று பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு மூளை அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்ற முன்னெச்சரிக்கை விதிமுறை (கன்கஷன்) மூலம் அவருக்கு மாற்று வீரராக நேற்றைய போட்டியில் சாஹல் இரண்டாவது பாதியில் களம் இறக்கப்பட்டார்.

- Advertisement -

ஐசிசியின் மாற்றியமைக்கப்பட்ட புது விதிமுறைப்படி மருத்துவர்கள் ஒரு வீரரை கன்கஷன் பரிசோதனை செய்து அதன் முடிவில் மாற்று வீரரை இறக்கலாம் என்று கூறினால் கன்கஷன் காரணமாக வெளியேறிய வீரருக்கு பதிலாக களமிறங்கும் வீரர் பேட்டிங் பவுலிங் செய்யலாம் என்பதே ஐசிசியின் விதி. அந்த விதி முறையின் மூலமே ஜடேஜாவின் இடத்தில் இறங்கி சாஹல் பந்துவீசினார்.

Smith

நேற்றைய போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக களமிறங்கிய சாஹல் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் அவர் இறங்கக்கூடாது என்று வாக்குவாதம் செய்தனர். ஆனால் இதற்கு முன்னதாக ஆஷஸ் தொடரின் போது ஸ்டீவ் ஸ்மித் பவுன்சர் பந்து தலையில் அடி வாங்கி கண்கஷன் மூலமாக வெளியேறிய போது அவருக்கு பதிலாக மார்னஸ் களமிறங்கி விளையாடினார். அப்போதுதான் அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு அறிமுகமாகிறார். அதன்பிறகு தற்போது வரை அவர் ஆஸ்திரேலிய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே உங்கள் அணியில் நடந்தால் அது சரி, இந்திய அணி செய்தால் தவறா ? என்பது போன்று இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement