விராட் கோலி எடுத்த முடிவால் கடுப்பான இந்திய ரசிகர்கள் – வேணும்னே பன்றாரா ? ரசிகர்கள் ஆதங்கம்

kohli 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் போடப்பட்ட பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றம் குறித்து பேசிய கேப்டன் கோலி ஷர்துல் தாகூருக்கு பதிலாக நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் ஷர்மா இணைகிறார் என்று அறிவித்திருந்தார். முதலாவது டெஸ்ட் போட்டியின் போது சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாக்கூர் இரண்டாவது போட்டியில் இடம்பெறவில்லை.

indvseng

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சியில் தாகூர் காயமடைந்ததன் காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் அவருக்கு பதிலாக நிச்சயம் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படுவார் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஏனெனில் முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே அஸ்வின் ஒதுக்கப்பட்டதே அப்போது பெரும் சர்ச்சையை கிளம்பியது. இந்நிலையில் இரண்டாவது போட்டியிலாவது அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி நேரத்தில் இஷாந்த் சர்மாவை கோலி சேர்த்து பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ishanth 1

மேலும் இஷாந்த் சர்மாவை தேர்வு செய்த அவர் இங்கிலாந்து போன்ற மைதானங்ங்களில் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாட விரும்புவதாகவும் வேகப்பந்து வீச்சாளரை அணியில் எடுத்தால் எந்த நேரத்திலும் விக்கெட் எடுத்து ஆட்டத்திற்கு திரும்ப முடியும் என்றும் கோலி விளக்கம் அளித்திருந்தார். அதுமட்டுமின்றி அஸ்வின் எப்போதுமே அணியின் 12 ஆவது வீரராக தொடர்வார் என்றும் கூறியிருந்தார்.

Ashwin

இந்நிலையில் கோலி எடுத்த இந்த முடிவு தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கோலி எடுத்த இந்த முடிவு தவறானது என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் எப்போது அயல் நாட்டிற்கு சென்றாலும் சிறப்பாக செயல்படும் அஸ்வினை மட்டும் கோலி ஏன் ஒதுக்குகிறார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

Advertisement