இனியும் இவர் தேவையா ? மோசமாக விளையாடி வரும் இவருக்கு கோலி ஆதரவு அளிப்பது ஏன் ? – ரசிகர்கள் கொதிப்பு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

indvsaus

- Advertisement -

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

saini

இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி பவுலிங் குறித்து இணையத்தில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த போட்டியில் 7 ஓவரை வீசிய அவர் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றாமல் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

மேலும் முதல் போட்டியை தொடர்ந்து இந்த போட்டியிலும் அவர் தனது சொதப்பலான பவுலிங்கை வெளிப்படுத்தியதால் இனியும் அவர் தேவையா ? அடுத்த ஆட்டத்தில் மற்றொரு வீரராக நடராஜனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே ? என்பது போன்ற தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஆர்சிபி அணிக்காக சைனி விளையாடி வருவதால் கோலி ஆதரவுடன் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வருவதாகவும் சிலர் குறிப்பிட்டு பேசியுள்ளனர். அதனால் நிச்சயம் மூன்றாவது போட்டியில் ஒரு மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் சைனிக்கு பதிலாக நடராஜன் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement