இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டியும் சிட்னி நகரில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.
இந்நிலையில் இந்த போட்டியின் இடையே ஒரு சுவாரசிய நிகழ்வு ஒன்றும் அரங்கேறியது. அதாவது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூட்டத்திலேயே இந்திய ரசிகர் ஒருவர் தனது ஆஸ்திரேலிய தோழியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு அந்த ஆஸ்திரேலியா பெண்ணும் ஓகே சொல்ல மைதானமே களைகட்டியது.
Was this the riskiest play of the night? 💍
She said yes – and that’s got @GMaxi_32‘s approval! 👏 #AUSvIND pic.twitter.com/7vM8jyJ305
— cricket.com.au (@cricketcomau) November 29, 2020
மேலும் அவர்கள் இருவரும் கட்டி அணைத்து முத்தமிட்டு கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான மேக்ஸ்வெல் கைதட்டி வரவேற்றார். ஏனெனில் அவரும் இந்திய பெண் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.