பிங்க்பால் டெஸ்ட் : இதுவரை யாரும் படைக்காத வரலாற்று சாதனையை படைத்து இந்தியா அசத்தல் வெற்றி

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று இன்றுடன் முடிவடைந்துள்ளது. போட்டி ஆரம்பித்து இரண்டு நாட்களிலேயே இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக இரண்டு நாட்களுக்குள் இரு அணிகளும் சேர்த்து 30 விக்கெட்டுக்களை இந்த ஆட்டத்தில் இழந்துள்ளன.

axar

- Advertisement -

அதில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களும், 2 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 33 ரன்கள் மட்டுமே அதிகமாக அடித்தது 145 ரன்கள் குவித்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சறுக்கினாலும் இரண்டாவது இன்னிங்சில் போது சரிவில் இருந்து மீண்டு அதிக ரன்களை குறிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் 81 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் காரணமாக 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Ashwin

மேலும் இந்த வெற்றி இலக்கான 48 ரன்களை 28.3 ஓவர்களில் இந்திய அணி அடித்தால் குறைந்த பந்துகளில் டெஸ்ட் போட்டியை வென்ற அணியாக சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியோ 7.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் குறைந்த பந்துகளில் டெஸ்ட் போட்டியை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

Rohith

இதற்கு முன்பு 968 பந்துகளில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி வீழ்த்தியதே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது. ஆனால் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை அதைவிட குறைந்த பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணியாக இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement