
நாட்டிங்ஹாம் நகரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் போது டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.
அதனை தொடர்ந்து 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 11.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 76 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதன் காரணமாக இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்திருந்தது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக எந்த ஒரு வீரரும் 20 ரன்களை கூட தொடாமல் ஆட்டமிழந்தது ரசிகத்தை மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒரு மோசமான சாதனையை பவர்பிளே ஓவர்களில் முதல் முறையாக செய்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய அந்த மோசமான சாதனை யாதெனில் :
நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் பவர்பிளே ஓவர்களுக்கு உள்ளாகவே விக்கெட்டுகளை இழந்தனர். இந்த போட்டியின் ஐந்தாவது ஓவரில் 52 ரன்களுக்கு எல்லாம் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை பவர்பிளே ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல்முறை.
இதையும் படிங்க : டி20 போட்டிகளில் முதன் முறையாக இந்திய அணி சந்தித்துள்ள பரிதாப நிலை.. மோசமான சாதனை – விவரம் இதோ
சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஏற்கனவே அயர்லாந்து தொடரை இழந்த இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் கிட்டத்தட்ட இழந்து விட்டது என்றே கூறலாம்.