சென்னை டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியை துவங்கும் இந்திய வீர்கள் – எப்போ தெரியுமா ?

Ind-1
- Advertisement -

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

pant

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்தது பிசிசிஐ. அதனை தொடர்ந்து தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு மைதானத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இந்தத்தொடரில் வீரர்கள் கலந்துகொள்ளும் நாள் குறித்தும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

sridhar 1

இந்நிலையில் தற்போது இந்த இரண்டு போட்டிகளிலும் விளையாடும் இந்திய அணி 27 ஆம் தேதி சென்னை வந்தடைவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்திய வீரர்கள் தனித்தனியாக அவர்களது நகரத்தில் இருந்து சென்னை வருகிறார்கள். மேலும் சென்னை வந்தவுடனே கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்படும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு பயிற்சியை தொடங்குவார்கள்.

அதேபோல இங்கிலாந்து அணியும் 27ஆம் தேதி இலங்கையிலிருந்து சென்னை வருகிறது. இலங்கை பயணத்தில் ஆடாத இங்கிலாந்து வீரர்களும் நேரடியாக சென்னை வந்து கலந்து கொள்வார்கள். இந்தியா இங்கிலாந்து வீரர்கள் என அனைவரும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் தங்க வைக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement