போட்டி முடிந்தும் இந்தூரிலேயே தங்கி இருக்கும் இரு அணிவீரகள். இன்னும் கொல்கத்தா போகலையாம் – காரணம் இதுதான்

Net
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்தூர் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

net 1

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பகல் இரவு டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஆனால் இருப்பினும் இரு அணி வீரர்களும் தற்போது இந்தூர் போட்டி முடிந்ததும் அங்கேயே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி இந்தூரில் 14ஆம் தேதி துவங்கிய போட்டி 18ஆம் தேதி வரை 5 நாள் நடக்கும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் போட்டி முன்கூட்டியே மூன்று நாட்களிலேயே முடிவடைந்ததால் மீதமுள்ள இரண்டு நாட்களையும் வீணாக்காமல் அங்கேயே மைதான விளக்கு வெளிச்சத்தில் இரு அணி வீரர்களும் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

ind 1

மேலும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் அவர்கள் இரவு நேரத்தில் மின் விளக்குகளில் கீழே பயிற்சியை மேற்கொண்ட தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. நேற்றைய பயிற்சியில் இரு அணி வீரர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நாளை இவ்விரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்று அங்கே தீவிர பயிற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.

Advertisement