ஐ.சி.சி யின் ஜனவரி மாதத்திற்கான விருதை வென்ற இந்திய வீரர் – விவரம் இதோ

Pant
- Advertisement -

ஐசிசி மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்க முடிவு செய்த நிலையில், ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் ரிஷப் பண்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட், அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் பெயரை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

IND-1

- Advertisement -

சிட்னியில் நடைபெற்ற டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 97 ரன்களும், பின்னர், பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் விளாசிய 89 ரண்களும் குறிப்பிடதக்கது. இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை கொண்டாடியது. இதனால் ரிஷப் பண்ட் பெயரை ஐசிசி பரிந்துரை செய்தது.

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 228 ரன்களும், 2-வது டெஸ்டில் 186 ரன்களும் விளாசினார். இதனால் இங்கிலாந்து 2-0 என இலங்கையை எளிதாக வீழ்த்தியது. இலங்கை தொடரை வெல்ல முக்கிய காரணமாக ரூட இருந்ததால் ஜோ ரூட் பெயரையும் பரிந்துரை செய்தது.

pant

அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளில் 3 சதம் விளாசினார். இதனால் அவரது பெயரையும் பரிந்துரை செய்தது.

ஐசிசி அறிமுகம் செய்துள்ள இந்த விருதை முதன்முறையாக வென்ற வீரர் என்ற பெமையை நம் இந்திய வீரர் ரிஷப் பண்ட் பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படித்தியுள்ளது.

Advertisement