தென்னாபிரிக்க கிரிக்கெட்டை தடைசெய்ய இருக்கும் ஐ.சி.சி – வெளியான அதிர்ச்சி தகவல்

rsa
- Advertisement -

ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலின் விதி முறைப்படி எந்தவித கிரிக்கெட் கவுன்சில் தனியார் அமைப்பு சார்பாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்தியாவைப் பொறுத்தவரையில் பிசிசிஐ போல, இங்கிலாந்தில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் போல ஒவ்வொரு நாட்டின் கீழ் இருக்கும் கிரிக்கெட் வாரியம் தனியார் அமைப்பு சார்பாகவே இருக்க வேண்டும். அதில் அந்நாட்டு அரசாங்கம் நேரடியாகத் தலையிடக்கூடாது. ஆனால் இப்பொழுது தென்னாப்பிரிக்காவில் நிலைமை தலைகீழாக உள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்தின் முடிவுகளை அந்நாட்டு அரசாங்கம் தற்போது நேரடியாக கையாளும் பட்சத்தில் ஐசிசி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை தடை செய்யும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

RSA

- Advertisement -

ஏப்ரல் 17 சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் 14 பேர் கொண்ட சபை ஒரு புதிய குறிப்பாணைக்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது ஒரு சுயாதீன தலைவர் மற்றும் பெரும்பான்மையான சுயாதீன இயக்குநர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும். இந்த 14 பேர் கொண்ட குழுவில் வாக்கு எண்ணிக்கையின் படி 75 சதவீதத்துக்கும் மேல் வரும் பட்சத்தில் அமைச்சர் நேரடியாக கிரிக்கெட் வாரியத்தில் தலையிடலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் 6 பேர் மட்டுமே அதற்கு சாதகமாக வாக்களித்தனர். ஐந்து பேர் அதற்கு எதிர்மறையாகவும் மூன்று பேர் வாக்களிக்காமவும் இருந்தனர். கடந்த ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை, தென்னாப்பிரிக்காவின் விளையாட்டு மந்திரி நாதி ம்தேத்வா, கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் (சிஎஸ்ஏ) நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட தனக்கு ‘வேறு வழியில்லை’ என்று கூறினார். சிஎஸ்ஏ உறுப்பினர்கள் முறையான வாக்கை அளிக்காதது பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.

முன்னதாக, சபையும் இடைக்கால வாரியமும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தேத்வா கூறினார். ஒப்பந்தத்தை அங்கீகரிக்கத் தவறியது “மோசமான நம்பிக்கையுடன் செயல்படுவதாக மட்டுமே விளக்க முடியும்.” கடந்த அக்டோபரில் நியமிக்கப்பட்ட இடைக்கால வாரியத்திற்கும், சபைக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு வாரம் கழித்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

- Advertisement -

அந்த அறிக்கையின்படி, “அடுத்த வாரம் சட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சர் தனது உரிமைகளைப் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்.” தென்னாப்பிரிக்காவின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குச் சட்டத்தின் படி, அமைச்சர், எந்தவொரு சர்ச்சை, தவறான நிர்வாகம் அல்லது பிற தொடர்புடைய விஷயங்களில் தலையிட உரிமை உண்டு, இது ஒரு விளையாட்டை இழிவுபடுத்தும் என்பதும் குறிப்பிடதக்கது.ஆனால் இந்தச் சட்டத்தின்படி, நாட்டில் விளையாட்டுகளை நிர்வகிப்பதற்கான சிஎஸ்ஏவின் அங்கீகாரத்தை பறிக்க விளையாட்டு அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

Rsa-3

தென்னாப்பிரிக்கா, சமீபத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த நாட்டில் நடந்த ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் விளையாடியது. ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்கிற கணக்கிலும் டி20 தொடரை 1-3 என்கிற கணக்கிலும் பாகிஸ்தான் அணியிடம் தோற்றனர். முன்னதாக 2021 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரை பறிகொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement