ஒருநாள் போட்டியில தான் விட்டுட்டாரு. ஆனா டெஸ்டுல நிச்சயம் மரண அடி அடிப்பாரு. நியூசி வீரர்களுக்கு – இயான் ஸ்மித் எச்சரிக்கை

Ian-smith
- Advertisement -

இந்தியா தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது அதிர்ச்சி அளித்தது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21ம் தேதி முதல் துவங்க உள்ளது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முத்திரையைப் பதிக்க தவறி வருகிறார். மேலும் தொடர்ச்சியாக சதங்களை விலாசும் கோலி இந்த தொடரில் பெரிய அளவில் இதுவரை ரன் குவிக்கவில்லை. மேலும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன் குவிக்க திணறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் ரோகித் சர்மா டி20 அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்த நிலையில் ஒருநாள் தொடரில் காயம் காரணமாக விலகியது பெரும் சறுக்கலை இந்திய அணிக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான இயான் ஸ்மித் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

Rohith

இந்த சகாப்தத்தில் இரண்டு சிறந்த வீரர்கள் என்றால் கோலி மற்றும் ரோஹித்தைத்தான் நான் கூறுவேன். அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகிறார்கள். மேலும் இந்திய அணி ஒருநாள் தொடரை கைவிட்ட போதிலும் டெஸ்ட் போட்டியில் பலமாக திரும்பும் என்று எதிர்பார்க்க நான் எதிர்பார்க்கிறேன்.

Kohli

அதுமட்டுமின்றி ஒருநாள் தொடரில் சோபிக்க தவறிய கோலி நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு பெரிய இன்னிங்ஸ்கள் நிச்சயமாக ஆடுவார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அவர் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் நிச்சயம் கோலி தனது ஆதிக்கத்தை டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக வெளிப்படுத்துவார் என்று இயான் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement