சச்சின் கோலி இருவரில் யார் பெஸ்ட். சர்ச்சையான கருத்தை கூறிய இயான் சேப்பல் – ரசிகர்கள் கண்டனம்

Chappell
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் கடவுள் ஆக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். ஒரு காலத்தில் இவர் படைத்த சாதனைகள் அனைத்தையும் தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி முறியடித்து வருகிறார். இந்நிலையில் இந்த இரண்டு வீரர்களில் யார் சிறந்தவர்கள் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் தேர்வு செய்துள்ளார்.

sachin

- Advertisement -

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பேசியதாவது : ஒரு பேட்ஸ்மேனாக சச்சின் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரிடையே போட்டி ஏற்பட்டால் அதில் விராட்கோலி தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அதேநேரத்தில் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆக இருக்கிறார்.

ரசிகர்களை பொறுத்தவரையில் விராட்கோலிக்கு இரண்டாவது இடம்தான் கிடைக்கும். நாளுக்கு நாள் சச்சினின் சாதனைகளை வேகமாக நெருங்கி வருகிறார்கள் கோலி. பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரது திறமையும் மிகவும் அபாரமானது என்று கூறியுள்ளார்.

Sachin

தற்போது வரை கடந்த 5 வருடமாக இந்திய அணியை வழிநடத்தி வரும் விராட் கோலி கேப்டனாக பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவரது தலைமையில்தான் இந்திய அணி மூன்று விதமான போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்தது. அதனை தாண்டி தற்போது வரை 71 சதங்கள் விளாசியுள்ளார் விராட் கோலி. இப்படியே சென்றால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை எளிதில் முறியடித்து விடுவார் என்றே தெரிகிறது.

sachin-kohli

இதனால் சச்சினை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என்று இயான் சேப்பல் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையாக மாறியது மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி சச்சினை கோலியுடன் ஒப்பிடக்கூடாது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement