ரோஹித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன். இதுதான் எனது பதில் – ஆஸி வீரர் பிராட் ஹாக் கணிப்பு

Hogg
- Advertisement -

தற்போதைய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக அறியப்படுபவர்கள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் என்றால் அது மிகையல்ல. மேலும் இந்திய அணியின் முக்கிய 2 தூண்களாக இவர்கள் இருவரும் பார்க்கப்படுகின்றனர்.

Rohith

- Advertisement -

தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் மாறி மாறி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்த இருவரில் கீழே யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வருகிறது. இதற்கு ஏற்கனவே பதிலளித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சேசிங் என்று வரும்போது சச்சினை விட விராட் கோலி தான் சிறந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சேசிங் என்று வரும்போது கோலியே எனது முதல் தேர்வு. சேஸிங்கில் எப்போதுமே அவர் சிறப்பாக விளையாடக் கூடியவர்.

Rohith-2

இதனடிப்படையில் சேசிங் கிங் என்று அவர் கோலியை குறிப்பிட்டார். ஆனால் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசும் போது யார் பெரியவர் என்று கூறுவது தவறானது. ஏனெனில் இரு வீரர்களுமே சிறப்பான வீரர்கள் எனவே ஒருவருடன் ஒருவர் ஒப்பிட முடியாது என்று கூறினார். மேலும் இந்திய அணிக்காக பெரிய இலக்குகளை விரட்டும்போது விராட் கோலி தொடர்ச்சியாக வெற்றிபெற உதவுகிறார்.

சேசிங் என்று வரும்போதெல்லாம் இந்திய அணிக்காக நின்று வெற்றிகளை குவித்து வருகிறார் என்றும் ஹாக் கூறினார். அதேபோன்று புதிய பந்துகளில் சிறப்பாக விளையாடும் திறனை ரோகித் பெற்றிருப்பதாகவும் எந்த ஒரு பவுலரையும் சாதாரணமாக எதிர்கொள்ளும் திறன் ரோஹித்திடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement