அவர் மீது நடவடிக்கை எடுத்துக்கு நன்றி. எனக்காக உதவி செய்ததற்கு நான் பெருமை கொள்கிறேன் – ஷமி மனைவி

Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி அசின் ஜஹான் வரதட்சணை மற்றும் பல பெண்களுடன் தொடர்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்தவருடம் தொடர்ந்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு உறுதிப்படுத்தும் வகையில் கொல்கத்தா காவல் நிலையத்திலும் தனது கணவர் மீது அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.

Shami 2

- Advertisement -

இந்த குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்து இருந்தாலும் அதன்பிறகு இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அலிப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஷமி மற்றும் அவரது சகோதரருக்கு பிடிவாரன்ட் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி 15 நாட்களுக்குள் ஷமி நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஷமி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால் இந்தியா திரும்பி உடன் விமானத்திலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய ஷமியின் மனைவி அசின் ஜஹான் கூறியதாவது : நீதித்துறை குறித்து பெரும் பெருமிதம் கொள்கிறேன். நான் ஒரு வருடத்துக்கு மேலாக என்னுடைய நீதிக்காக போராடுகிறேன். என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்பதால் அனைவரையும் விட தான்தான் சக்தி வாய்ந்தவர் என்று ஷமி நினைக்கிறார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

mohamadshami

இதனிடையே இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் சமி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்து இருப்பதால் அவர் தற்போது இந்தியா திரும்பியவுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார் என்று தெரியவந்துள்ளது.

Advertisement