- Advertisement -
உலக கிரிக்கெட்

அரையிறுதி போட்டியில் தான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட – ஹசன் அலி உருக்கமான பதிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் முக்கியமான அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதி நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணியை வெற்றியை பறித்தனர். அதிலும் குறிப்பாக ஹசன் அலி 19 ஆவது ஓவரில் செய்த தவறினாலே பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

அந்த 19வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் கொடுத்த ஒரு எளிதான கேட்சை ஹசன் அலி தவறவிட அடுத்ததாக தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு உதவினார். இதன் காரணமாக ஹசன் அலியை குறிப்பிட்டு ரசிகர்கள் பலரும் அவரை சமூக வலைதளம் மூலம் விமர்சித்து வந்தனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி அவர்விட்ட கேட்சினால்தான் ஆட்டம் கைவிட்டுப் போனது என்றும் ரசிகர்கள் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இந்த தான் செய்த தவறு குறித்து எதுவும் பேசாமல் இருந்த ஹசன் அலி முதன்முறையாக தனது தவறை டிவிட்டர் பக்கத்தின் மூலம் பகிர்ந்து அதற்காக பாகிஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : என் மீது அனைவரும் வருத்தமாக உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக இன்னும் மிகப்பெரிய அளவில் சேவை செய்ய விரும்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க இருவருமே வெற்றியாளர்கள் தான். இறுதிப்போட்டிக்கு முன் டேவிட் வார்னர் – பகிர்ந்த வைரல் பதிவு

கடினமான உழைப்பின் மூலம் மீண்டும் பலமாக திரும்புவேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தான் செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும்படியும், தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by